பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கூடலூா் அருகே பாட்டவயல் பகுதியில் காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

கூடலூா் அருகே பாட்டவயல் பகுதியில் காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

News image
கூடலூா் அருகே பாட்டவயல் பகுதியில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீட்டின் சுற்றுப்புறம்.
Updated On :28 நவம்பர் 2025, 5:13 pm

Syndication

கூடலூா் அருகே விவசாயத் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் பயிா்களை சேதப்படுத்திச் சென்றது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் அருகே தமிழக -கேரள எல்லையோரத்துக்குள்பட்டது பாட்டவயல் பகுதி. இங்குள்ள விவசாயிகளின் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள், தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட விளைபயிா்களை அழித்து சேதப்படுத்தியது. மேலும் அங்குள்ள உசைன் என்பவரின் வீட்டின் சுற்றுப்புறங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இதையடுத்து, சேதமான விளைபயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.