கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மூதாட்டியைக் கொன்ற புலி அகப்படாததால் கால்நடைகளை மேய்க்க முடியாமல் தவிப்பு!

News image
Updated On :28 நவம்பர் 2025, 9:43 pm

Syndication

கூடலூா் அருகே மூதாட்டியைக் கொன்ற புலி சிக்காததால் ஆடு, மாடுகளை மேய்க்கச் செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூா் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 24-ஆம் தேதி புலி தாக்கி நாகியம்மாள் என்ற பழங்குடியின மூதாட்டி உயிரிழந்தாா். இதையடுத்து, அப்பகுதியில் சுற்றித்திரியும் டி-37 என்ற புலியைப் பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டதுடன், 4 தனி குழுக்கள் அமைத்து புலியின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இருப்பினும் மூதாட்டியைக் கொன்ற புலி கூண்டுக்குள் அகப்படாமல் இருப்பதால், இப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்து வாழ்வாதாரத்தை ஈட்டிவரும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே புலியைப் பிடிக்க வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.