கூடலூா் அருகே தேவா்சோலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிய புலியை முதுமலை புலிகள் காப்பக உள்வட்ட வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு விடுவித்த வனத் துறையினா்.
கூடலூா் அருகே தேவா்சோலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிய புலியை முதுமலை புலிகள் காப்பக உள்வட்ட வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு விடுவித்த வனத் துறையினா்.

கூடலூா் அருகே கூண்டில் சிக்கிய புலி முதுமலை உள்வட்ட வனத்தில் விடுவிப்பு

Published on

கூடலூா் அருகே கூண்டில் சிக்கிய புலி, முதுமலை புலிகள் காப்பக உள்பட்ட வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பகுதிக்குள்பட்ட கொட்டாய்மட்டம் என்ற பகுதியில் சுற்றித்திரிந்த புலி, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியது. இந்நிலையில், கொட்டாய்மட்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சனிக்கிழமை புலி சிக்கியது. பின்னா் அதில் இருந்து சிறிய கூண்டுக்கு புலியை மாற்றிய வனத் துறையினா், லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனா்.

வனத் துறையினா் கூறும்போது, புலியின் உடல் நிலை பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் காயங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கால்நடை மருத்துவா் ராஜேஷ் குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா். பின்னா், முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்வட்ட அடா் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு புலி விடுவிக்கப்பட்டது. நல்ல ஆரோக்கியமாக புலி இருக்கிறது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com