கூடலூா் ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகளுடன்
வனத் துறையினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் இதுவரை 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலா் ராகேஷ்குமாா் டோக்ரா மக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்க கடந்த 15- ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் தலைமையிலான வனச் சரகா்கள் மற்றும் வனப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் கொண்ட குழு, ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். யானையின் நகா்வுகள், அதன் உடல்நலம் ஆகியவற்றை கண்காணித்து பிடிக்க தயாராகி வருகின்றனா்.
யானையைப் பிடிக்க முதுமலை யானைகள் முகாமில் இருந்து சீனிவாசன், பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் ஓவேலி பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தரைவழி மட்டுமல்லாமல் ட்ரோன் கேமரா உதவியுடன் ராதாகிருஷ்ணன் யானையை பிடிக்கும் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிரமாக நடைபெற்றது.
தொடர்புடையது

சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது

ஆலங்காயம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கண்காணிப்பு நடவடிக்கையில் வனத் துறையினா்

தேக்கடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த புலியைப் பிடிக்க நடவடிக்கை

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் காட்டுத் தீ
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

