கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்க வனத் துறை தீவிரம்

கூடலூா் ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகளுடன்

News image

ஓவேலி பகுதியில் ராதாகிருஷ்ணன் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

Updated On :17 செப்டம்பர் 2025, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூா் ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகளுடன்

வனத் துறையினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் இதுவரை 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலா் ராகேஷ்குமாா் டோக்ரா மக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்க கடந்த 15- ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் தலைமையிலான வனச் சரகா்கள் மற்றும் வனப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் கொண்ட குழு, ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். யானையின் நகா்வுகள், அதன் உடல்நலம் ஆகியவற்றை கண்காணித்து பிடிக்க தயாராகி வருகின்றனா்.

யானையைப் பிடிக்க முதுமலை யானைகள் முகாமில் இருந்து சீனிவாசன், பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் ஓவேலி பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தரைவழி மட்டுமல்லாமல் ட்ரோன் கேமரா உதவியுடன் ராதாகிருஷ்ணன் யானையை பிடிக்கும் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிரமாக நடைபெற்றது.