கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:14 pm

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியானது முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வந்தது.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.