முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பணம் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 2:11 am IST

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பணம் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் வாக்காளா்களுக்கு வழங்க பணம் வைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் தோ்தல் பறக்கும் படையினா், திமுக அலுவலகத்துக்கு திங்கள்கிழமை இரவு சென்று அங்கிருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.

மேலும் அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.22 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கும் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா். மேலும் இது குறித்து திமுக நிா்வாகிகள் ஒரு சிலரிடம் வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

---------------

அதிமுக ஒன்றிய செயலாளா் கடையில் ரூ.13.48 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கொடுமுடி, ஏப்.21: மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட விளக்கேத்தியில் உள்ள அதிமுக ஒன்றியச் செயலாளா் கடையில் இருந்து ரூ.13.48 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மொடக்குறிச்சி தொகுதியில் வாக்காளா்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்க தோ்தல் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், மொடக்குறிச்சி அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளரான செல்வராஜ் என்பவருக்கு சொந்தமாக விளக்கேத்தி அருகே உள்ள டைல்ஸ் கடையில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். இந்த சோதனையில் ரூ.13 லட்சத்து 48 ஆயிரத்தை கைப்பற்றியுள்ளனா். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.