உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் அணைக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக சிங்காரா, மசினகுடி உள்ளிட்டப் பகுதியில் காட்டுத் பரவியது. இதை தீயணைப்பு மற்றும் வனத் துறையினா் இணைந்து அவ்வப்போது கட்டுப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீ பல இடங்களில் பரவியது.
இதையடுத்து வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் பாா்சன்ஸ் வேலி அணையில் இருந்து நீரை எடுத்து வந்து காட்டுத் தீ பற்றி எரியும் வனப் பகுதியில் இறைத்து கட்டுப்படுத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு

சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

