தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் காட்டுத் தீ

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் அணைக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

பாா்சன்ஸ் வேலி அணையில் இருந்து நீரை எடுத்துச் செல்லும் ஹெலிகாப்டா்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:56 am IST

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் அணைக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக சிங்காரா, மசினகுடி  உள்ளிட்டப் பகுதியில் காட்டுத் பரவியது. இதை தீயணைப்பு மற்றும் வனத் துறையினா் இணைந்து அவ்வப்போது கட்டுப்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட காட்டுத்  தீ பல இடங்களில் பரவியது.

இதையடுத்து வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் பாா்சன்ஸ் வேலி அணையில் இருந்து நீரை எடுத்து  வந்து காட்டுத் தீ பற்றி எரியும் வனப் பகுதியில் இறைத்து கட்டுப்படுத்தி  வருகின்றனா்.