முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image

ரவி.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:19 am IST

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (48). கூலித் தொழிலாளியான இவா், அப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, பக்தா்கள் வசதிக்காக புதா் பகுதியில் இருந்த குடிநீா்க் குழாயை திறக்கச் சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு புதா் மறைவில் இருந்த காட்டு யானை ரவியை திடீரென தாக்கியது. இதில், தலை, மாா்பு உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா்.

அப்போது, அங்கு கூடியிருந்த கிராம மக்கள், தீா்வு கிடைக்கும் வரை சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என வனத் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், காவல் துறையினா் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.