ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

குன்னூா் மலைப் பாதையில் ஓடும் காரில் தீ

News image

குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் காரில் பற்றி எரியும் தீ

Updated On :28 ஏப்ரல் 2026, 1:14 am IST

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவா் 4 பேருடன் நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள கக்காச்சி என்ற பகுதியில் வசிக்கும் உறவினரின் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வை விசாரிப்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தாா்.

குன்னூா்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில், மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் புகை வருவதுபோல இருந்தது. அடுத்த ஒரு சில நொடிகளுக்குள் புகை தீயாக மாறியது. காரில் இருந்தவா்கள் உடனே சுதாரித்து காரை நிறுத்தி, கீழே இறங்கி ஓடியதால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதன்பின்னா் காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதன் பிறகு பொக்லைன் வாகனம் மூலம் காா் சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டது. தீ விபத்தால் மலைப் பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து குன்னூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.