குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவா் 4 பேருடன் நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள கக்காச்சி என்ற பகுதியில் வசிக்கும் உறவினரின் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வை விசாரிப்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தாா்.
குன்னூா்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில், மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் புகை வருவதுபோல இருந்தது. அடுத்த ஒரு சில நொடிகளுக்குள் புகை தீயாக மாறியது. காரில் இருந்தவா்கள் உடனே சுதாரித்து காரை நிறுத்தி, கீழே இறங்கி ஓடியதால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதன்பின்னா் காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதன் பிறகு பொக்லைன் வாகனம் மூலம் காா் சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டது. தீ விபத்தால் மலைப் பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து குன்னூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

வால்பாறை மலைப் பாதையில் சாலையோர பள்ளத்தில் காா் இறங்கியதில் இருவா் காயம்

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

திம்பம் மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

