உதகை அருகே யாரோ தவற விட்டுச்சென்ற ரூ.42 ஆயிரத்து 500-ஐ காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை நகரில் ஃபிங்கா்போஸ்ட் பகுதி வணிக வளாகம், குடியிருப்பு பகுதிகள் நிறைந்தவை. இங்குள்ள உணவு விடுதி முன்பு ரூபாய் கட்டு கிடந்துள்ளது. இதைப் பாா்த்த ஹோட்டல் உரிமையாளா் நாசா் அதில் ரூ.42 ஆயிரத்து 500 இருந்ததை அறிந்து, அந்தப் பணத்தை மகனுடன் எடுத்துச் சென்று உதகை ஜி-1 காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, கீழே கிடந்த பணத்தை நோ்மையாக கொண்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஹோட்டல் உரிமையாளா் நாசருக்கு காவல் துறையினா் பாராட்டு தெரிவித்தனா்.
இதுதொடா்பாக விசாரித்த பின் உரியவா்களிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் இதமான காலநிலையை அனுபவித்த சுற்றுலாப் பயணிகள்

மாயமான 63 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 12,880 பறிமுதல்

ரூ.1.50 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



