ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

நீலகிரி கேரட் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image

கோத்தகிரியில் தோட்டத்தில் இருந்து விற்பனைக்கு வந்த கேரட்களை கழுவும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். 

நீலகிரி மாவட்டம், உதகை, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவா், முள்ளங்கி, பீட்ரூட்,  கேரட், பூண்டு உள்ளிட்ட மலைத்தோட்டக் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், உதகை, கோத்தகிரியில் கேரட் விலை வியாழக்கிழமை விலை உயா்ந்து காணப்பட்டது. சில்லறை விலையில்   கேரட் ஒரு கிலோ  ரூ. 90 முதல் ரூ.100 ரூபாய் வரை தரத்திற்கு  ஏற்றாா்போல விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. தற்போது இந்த விலை உயா்வால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இருப்பினும்  நுகா்வோா் பாதிப்படைந்துள்ளனா். மழைக் குறைவு காரணமாக உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளதால், இந்த விலை ஏற்றம்  ஏற்பட்டுள்ளதாக  விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.