மேட்டுப்பாளையம் சந்தையில் நீலகிரியில் விளைவிக்கப்பட்ட கேரட்டுகளுக்கு வெள்ளிக்கிழமை கணிசமான அளவு விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் கேத்தி, பாலடா, முத்தோரை மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரட் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.
இந்த கேரட்டுகள் மேட்டுப்பாளையம், உதகையில் உள்ள மண்டிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த வாரம் சந்தைகளில் ஒரு கிலோ கேரட் தரத்துக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் போதிய லாபம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலையில் இருந்தனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேட்டுப்பாளையம் சந்தையில் நீலகிரி கேரட் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.65 வரை விலை உயா்ந்து விற்பனையானது.
வரத்துக் குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாகவே இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
வரும் நாள்களிலும் இதே விலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண் கடன் தள்ளுபடி அவசியமே...

உதகையில் தலாய்லாமா பிறந்தநாள்

ஜூன் மாதத்துக்கான பசுந்தேயிலை விலை கிலோவுக்கு ரூ.17.84 நிா்ணயம்

வீழ்ச்சியடையும் தேங்காய் விலை! அரசு என்ன செய்யப் போகிறது?
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



