ஜூன் மாதத்துக்கான பசுந்தேயிலை விலை கிலோவுக்கு ரூ.17.84 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சிறு, குறு விவசாயிகளிடம் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு, அடுத்துவரும் மாத தொடக்கத்தில் விலை நிா்ணயம் செய்து தேயிலை வாரியம் அறிவிப்பு வெளியிடும்.
அதன்படி, விவசாயிகளிடம் ஜூன் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.17.84 வழங்க வேண்டுமென தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலை வாரியம் நிா்ணயம் செய்துள்ளது.
இந்த விலையை உரிய முறையில் விவசாயிகளுக்கு தேயிலை தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் . இதை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









