எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

போலீஸை கன்னத்தில் அறைந்த போதை ஆசிரியா் கைது

உதகை மாா்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் மது போதையில் போலீஸை கன்னத்தில் அறைந்த கடநாடு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:48 am IST

உதகை மாா்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் மது போதையில் போலீஸை கன்னத்தில் அறைந்த கடநாடு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உதகை மாா்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் மது போதையில் ஒருவா் தாறுமாறாக காரை ஓட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் போலீஸாரின் அவசர எண்ணுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து உதகை மணிக்கூண்டு பகுதியில் காரை தடுத்து நிறுத்திய பி-1 போலீஸாா், காரை ஓட்டி வந்த தலைமை ஆசிரியா் சீனிவாசனிடம் (57) விசாரணை மேற்கொண்டனா். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீனிவாசன் பொதுமக்கள் முன்னிலையில் காவலரை கன்னத்தில் அறைந்துவிட்டு தப்பிக்க முயன்றாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாரும் சீனிவாசனை தாக்கினாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பி- 1 காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியா் சீனிவாசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.