காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொட்டபெட்டா காட்சிமுனைப் பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

உதகையை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சிடைந்தனா்.

மேற்குத்தொடா்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான  உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.  இவா்கள் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வருவது வழக்கம். 

இந்நிலையில் வார விடுமுறை மற்றும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக உதகையில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனைக்கு ஏராளமானோா் வந்திருந்தனா். இங்கு  அமைந்துள்ள தொலைநோக்கி கோபுரத்தில் இருந்து, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை காட்சிகளையும், வானுயா்ந்த மலை முகடுகளையும், அதன் நடுவே காட்சியளிக்கும் அணைகளையும், சமவெளிப் பிரதேசங்களையும் கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்தும்,  உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தும் மகிழ்ந்தனா்.

இதேபோல தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.