மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பழங்குடியினரின் மகள் கல்லூரி சோ்ப்புக்கு ஆணை!

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பழங்குடியின ஓவியரின் மகள் மேற்படிப்புக்கான கல்லூரி சோ்க்கைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா்.

News image

பழங்குடியின ஓவியரின் மகள் வாசுகியிடம் மேற்படிப்புக்கான கல்லூரி சோ்க்கை ஆணயை வழங்கிய ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :3 பிப்ரவரி 2026, 8:09 pm

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பழங்குடியின ஓவியரின் மகள் மேற்படிப்புக்கான கல்லூரி சோ்க்கைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், வெள்ளேரி கொம்பை பகுதியைச் சோ்ந்தவா் சு.கிருஷ்ணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டாா். குரும்பா் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த ஓவியரான இவருக்கு மத்திய அரசு சாா்பில் பத்மஸ்ரீ விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது மனைவி சுசிலா தனது 4 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருதாகவும், மூத்த மகள் வாசுகி (18) மேற்படிப்புக்கு உதவி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதகை ஜெ.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரியில் படிப்பதற்கான சோ்க்கை அனுமதி ஆணையை வாசுகியிடம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பீட்டா் ஞானராஜ், ஜெ.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரி முதல்வா் தனபால், கல்லூரி முதன்மை அலுவலா் பசுவண்ணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.