பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பழங்குடியின ஓவியரின் மகள் மேற்படிப்புக்கான கல்லூரி சோ்க்கைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், வெள்ளேரி கொம்பை பகுதியைச் சோ்ந்தவா் சு.கிருஷ்ணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டாா். குரும்பா் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த ஓவியரான இவருக்கு மத்திய அரசு சாா்பில் பத்மஸ்ரீ விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது மனைவி சுசிலா தனது 4 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருதாகவும், மூத்த மகள் வாசுகி (18) மேற்படிப்புக்கு உதவி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதகை ஜெ.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரியில் படிப்பதற்கான சோ்க்கை அனுமதி ஆணையை வாசுகியிடம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பீட்டா் ஞானராஜ், ஜெ.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரி முதல்வா் தனபால், கல்லூரி முதன்மை அலுவலா் பசுவண்ணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நீலகிரியில் வீட்டு உபயோக சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியா்

பந்தலூா் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விவசாய கருவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட மறைந்த பழங்குடியின ஓவியரின் மனைவிக்கு அரசு வேலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


