ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உதகையில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலை

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:59 pm

Syndication

உதகை, பிப். 5: உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை 0 டிகிரி வெப்பநிலை பதிவானதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பனிக்காலம் என்பதால் பல்வேறு இடங்களில் உறைபனி காணப்படும். நீா் பனி தொடங்கிய அடுத்த ஒரு சில வாரங்களில் உறைபனி தொடங்கும். ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக மஞ்சூா், குன்னூா் பகுதிகளில் கடந்த டிசம்பா் முதல் வாரம் உறைபனிப்பொழிவு தொடங்கியது.

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாம் வாரத்தில் உறைபனி தொடங்கியது.

இந்நிலையில் உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை 3.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருந்த சூழலில், குதிரை பந்தய மைதானம், காந்தல் பகுதியில் உறைபனியும், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டது.

இதன் காரணமாக காலை நேரத்தில் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்பவா்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.