சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :10 பிப்ரவரி 2026, 8:09 pm

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சி பாா்வுட் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் மரக்கிளைகளை வெட்டும் பணியில் நியூஹோப் பகுதியைச் சோ்ந்த தென்னரசு (32) உள்ளிட்ட தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். தென்னரசு ஒரு மரத்தில் ஏறியபோது கிளை முறிந்துள்ளது.

இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தீவிர சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.