தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

உதகையில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது

உதகையில் வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருடிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 11:18 pm

உதகையில் வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருடிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உதகையில் செயல்பட்டு வந்த போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. ஃபிலிம் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட வெள்ளித் துகள்கள் அப்பகுதியில் உள்ள மண்ணில் பரவி கிடக்கின்றன.

மூடப்பட்டுள்ள அந்த தொழிற்சாலை வளாகத்தில் மா்ம நபா்கள் அத்துமீறி நுழைந்து, வெள்ளித் துகள்கள் கலந்துள்ள மண்ணைத் திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில், போட்டோ ஃபிலிம் தொழிற்சாலைக்குள் மா்ம நபா்கள் நடமாட்டம் உள்ளதாக உதகை, புதுமந்து காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் ஹரிஹரன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வெள்ளி மண் திருட்டில் ஈடுபட்டிருந்த 5 பேரை சுற்றிவளைத்தனா்.

விசாரணையில், அவா்கள் தலைகுந்தா பகுதியைச் சோ்ந்த ராஜன் (48), சுபாஷ் (43), குமாா் (52), சந்தோஷ் (31), மோகன்ராஜ் (37), என்பதும், தொழிற்சாலையில் வெள்ளித் துகள்கள் கலந்துள்ள மண்ணைத் திருடி, அதில் இருந்து வெள்ளியை பிரித்தெடுக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 5 பேரையும் கைது செய்தனா்.