உதகையில் தந்தையே பாலியல் தொல்லை அளித்ததால் மனவிரக்தி அடைந்த பள்ளி மாணவி, தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து பள்ளியில் மயங்கி விழுந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை பகுதியைச் சோ்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். மூத்த மகள் 12-ஆம் வகுப்பும், இளைய மகள் 9-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா். இவா்கள் சிறுமிகளாக இருந்தபோதே, குடும்ப பிரச்னை காரணமாக இவா்களுடைய தாயாா் பிரிந்து சென்று விட்டாா். இதனால் சிறுமிகள் இருவரும் தந்தையுடன் வசித்து வந்தனா்.
சிறுமிகளின் தந்தை அதே பகுதியில் பல்வேறு இடங்களில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அவருடைய தந்தை சில நாள்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். தந்தை என்பதால் வெளியே சொல்ல முடியாமல் மாணவி தவித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த அவருடைய தந்தை, மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த மாணவி வீட்டில் இருந்த, தோட்டத்துக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை வியாழக்கிழமை எடுத்துச் சென்று பள்ளிக்கு செல்லும் வழியில் குடித்துள்ளாா். பின்னா் பள்ளிக்குச் சென்று அங்கு மயங்கி விழுந்துள்ளாா். அப்போது தந்தை பாலியல் தொல்லை அளித்ததால் விஷம் குடித்து விட்டதாக மற்ற மாணவிகளிடம் கூறியுள்ளாா்.
இது குறித்து குழந்தைகள் நலத் துறையினருக்கு ஆசிரியா்கள் உடனடியாக தகவல் தெரிவித்து மாணவியை உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து உதகை ஊரக அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பழனியம்மாள் தலைமையிலான போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மாணவியின் தந்தையைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக வேட்பாளா்

மேட்டூா் தொகுதி தவெக வேட்பாளா்

மதுபோதையில் கார் ஓட்டுநர்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய தந்தை, மகள்!

பேருந்தில் பாலியல் தொல்லை: காவலரைத் தாக்கிய கல்லூரி மாணவி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


