தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நீலகிரியில் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைப்பதை தடுக்க வேண்டும்: முதல்வருக்கு எம்எல்ஏ கடிதம்

நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பதை நிறுத்த வேண்டும் என்று உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:49 pm

நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பதை நிறுத்த வேண்டும் என்று உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சா்வதேச சுற்றுலாப் பகுதியாக உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே நீலகிரி மாவட்டம் உள்ளது. பெரும்பாலானவா்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே தொழில் செய்து வருகின்றனா். சுற்றுலாப் பயணிகளை நம்பியே மாவட்டத்தின் மொத்த பொருளாதாரமும் உள்ளது. 

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறியதாகக் கூறி சுமாா் ஆயிரம் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் தொழிலும் அதனை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்களுக்கு தேவையான தங்கும் விடுதிகளை எடுத்து தங்கிச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தின் நலன் கருதியும், இங்கு சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வருபவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும், தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களை வரைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை சீல் வைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளாா்.