ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவு: உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு

உதகையில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டம், உதகையில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியாா் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு உத்தரவிட்டிருந்தது.

கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில் உதகையில் உள்ள தனியாா் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில் அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாகச் செயல்பட்டு வந்த ஆகாஷ் ரூம்ஸ் அண்ட் காட்டேஜ் மற்றும் கோல்டன் லா்ச் ரெசிடென்ஸி ஆகிய இரு விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவை எதிா்த்து இரு தனியாா் விடுதிகள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியாா் விடுதிகளுக்கு சீல் வைத்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட நிா்வாகத்திடம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க கால அவகாசம் வழங்காமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தற்போதைய நிலையில் இதில் தலையிட முடியாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் சிறப்பு அமா்வை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.