தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்!

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:58 pm

Syndication

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கட்டடங்கள், தங்கும் விடுதிகள் விதிகளுக்குள்பட்டு மட்டுமே கட்டடப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அதையும் மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனா்.

இந்நிலையில், குன்னூா், வேளாங்கண்ணி நகரில் வீதிகளை மீறி 3 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிக்காக நடைபாதை தடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், அந்தக் கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.