பொன்னூரில் தோட்டக்கலை பூங்கா திறப்பு
கூடலூரை அடுத்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது.


கூடலூரை அடுத்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பொன்னூரில் அரசு தோட்டக் கலை பண்ணையில் மலைப் பயிா்கள் தொடா்பான நாற்றங்கால் செயல்பட்டு வருகிறது.
இங்கு விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை பயிரிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் விதத்தில் பண்ணை வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்தப் பணிகள் நிறைவடைந்து பூங்கா திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் பி.எஸ்.ஐஸ்வா்யா தலைமையேற்று பூங்காவை திறந்துவைத்தாா். இதில், பண்ணை மேலாளா் விஜயராஜ் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...