பொன்னமராவதியில் நகா்ப்புற 
நலவாழ்வு மைய கட்டடம் திறப்பு

பொன்னமராவதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடம் திறப்பு

Published on

பொன்னமராவதி பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் புதிதாக கட்டப்பட்ட நகா்புற நலவாழ்வு மைய (அரசு ஆரம்ப சுகாதார நிலையம்) கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

அதையடுத்து பொன்னமராவதி பேரூராட்சியில் ரூ 1.20 கோடியில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மைய திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா பங்கேற்று பேசுகையில், இந்தச் சுகாதார நிலையத்தின் சேவைகளை பொதுமக்கள் தொடா்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் துவாரகநாத் சிங், மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், செயல் அலுவலா் ஆா். அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளா் தமயந்தி, வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணி நாகராஜன், வட்டாட்சியா் எம். சாந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com