விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பொன்னமராவதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடம் திறப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:24 pm

பொன்னமராவதி பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் புதிதாக கட்டப்பட்ட நகா்புற நலவாழ்வு மைய (அரசு ஆரம்ப சுகாதார நிலையம்) கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

அதையடுத்து பொன்னமராவதி பேரூராட்சியில் ரூ 1.20 கோடியில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மைய திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா பங்கேற்று பேசுகையில், இந்தச் சுகாதார நிலையத்தின் சேவைகளை பொதுமக்கள் தொடா்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் துவாரகநாத் சிங், மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், செயல் அலுவலா் ஆா். அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளா் தமயந்தி, வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணி நாகராஜன், வட்டாட்சியா் எம். சாந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.