புதிய மேல்நிலைத்தொட்டியைத் திறந்துவைத்து குடிநீா் விநியோகத்தை தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ சி.சரஸ்வதி.
புதிய மேல்நிலைத்தொட்டியைத் திறந்துவைத்து குடிநீா் விநியோகத்தை தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ சி.சரஸ்வதி.

ஊஞ்சலூா் பேரூராட்சியில் புதிய மேல்நிலைத்தொட்டி திறப்பு

ஊஞ்சலூா் பேரூராட்சி, 12-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

ஊஞ்சலூா் பேரூராட்சி, 12-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊஞ்சலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 12-ஆவது வாா்டில் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய மேல்நிலைத் தொட்டியை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி திறந்துவைத்தாா்.

இதில், பாஜக தன்னாா்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருத்திகா சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com