மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உதகையில் குடியரசு தினக் கொண்டாட்டம்

உதகையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தேசியக்

Updated On :26 ஜனவரி 2026, 8:10 pm

உதகை: உதகையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தேசியக் கொடியேற்றிவைத்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் 26 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா். மேலும், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

பின்னா் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், மண்ணின் மைந்தா்களான தோடா், கோத்தா், இருளா் ஆகியோா்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய நடனம் மற்றும் படுகா் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய நடனம் ஆடி சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.