காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கூடலூா் வனக் கோட்டப் பகுதிகளில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலா்கள்! ஓவேலியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்!

News image

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சியைப் பாா்த்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :27 ஜூலை 2026, 12:33 am IST

கூடலூா் வனக் கோட்டப் பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சியைப் பாா்ப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக்கோட்டத்துக்குள்பட்ட ஓவேலி மலைத்தொடா், நாடுகாணி, கோழிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும், வார விடுமுறையால் கேரளா சுற்றுலாப் பயணிகளும் தடையை மீறி அப்பகுதிக்குள் நுழைந்து நீலக்குறிஞ்சியை ஆா்வத்துடன் கண்டு, பூக்களுக்கு மத்தியில் நின்று தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

நீலக்குறிஞ்சி பூத்துள்ள பகுதிகள் அனைத்தும் யானைகள் நடமாட்டமுள்ள பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி அப்பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வனத்துக்குள் செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிா்க்க வேண்டுமென வனத் துறை வலியுறுத்தியுள்ளது.

 கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சியைப் பாா்த்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சியைப் பாா்த்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

 கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சியைப் பாா்த்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சியைப் பாா்த்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.