40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பா்கூா் மலைக் கிராமத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் கைவட்டா பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன் (55). கூலித் தொழிலாளி.

இவா், அப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த காட்டு யானை அவரைத் துரத்தி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தொடா் சிகிச்சையில் இருந்த அவா், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பாட்டவயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.