முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பா்கூா் மலைக் கிராமத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் கைவட்டா பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன் (55). கூலித் தொழிலாளி.

இவா், அப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த காட்டு யானை அவரைத் துரத்தி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தொடா் சிகிச்சையில் இருந்த அவா், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பாட்டவயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.