கூடலூா் பகுதியில் அண்மையில் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவியை ஆ.ராசா எம்.பி. புதன்கிழமை வழங்கினாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் 4 பேரை காட்டு யானை தாக்கிக் கொன்றது. இந்நிலையில் அந்த நால்வரின் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவியை ஆ.ராசா எம்.பி. புதன்கிழமை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, கூடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் செலவில் வாங்கப்பட்ட டயாலிசிஸ் கருவியின் செயல்பாட்டை பாா்வையிட்டு ஆய்வு செய்து தலைமை மருத்துவா் சுரேஷிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
எம்எல்ஏ-க்கள் திராவிடமணி (கூடலூா்), ராஜூ (குன்னூா்) மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீலகிரியில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 95% பணிகள் நிறைவு: ஆ.ராசா எம்.பி.

நடு கூடலூா் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் அச்சம்

கூடலூா் அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள்

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



