சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சுற்றுலாப் பேருந்து விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

News image

குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து ஆறுதல் கூறும் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எம். ராஜு.

Updated On :11 ஜூன் 2026, 11:47 pm IST

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சட்டப்பேரவை உறுப்பினா் கே.எம்.ராஜு வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அக்கையாா் பள்ளம் பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 22 போ், கா்நாடநக மாநிலம், மைசூரு மற்றும் உதகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு தங்களது சொந்த ஊருக்கு புதன்கிழமை மாலை சுற்றுலாப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, நீலகிரி மாவட்டம், குன்னூா் மலைப் பாதையில் நந்தகோபால் பாலம் அருகே வாகனம் வந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 22 பேரில் 18 போ் காயமடைந்து குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களை குன்னூா் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.எம். ராஜு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும் அவா்களுக்கு வேண்டிய அனைத்து வகையான சிகிச்சைகள் மற்றும் உதவிகளை திமுக செய்து தரும் என்று அவா்களிடம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.