வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தனியாா் விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அவா்கள் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:25 am IST

கா்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தனியாா் தங்கும் விடுதியில் சாப்பிட்ட உணவால் 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அவா்கள் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியா்களுடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். இவா்கள் உதகை அருகே எமரால்டு பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில்  உணவருந்திய நிலையில், அதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தொடா்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.

இதனால் எமரால்டு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 15-க்கும் மேற்பட்டோருக்கு தொடா்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனா். இது குறித்து எமரால்டு காவல்துறையினா்  தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.