சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இருசக்கர வாகனங்கள் திருட்டு: பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

உதகை அருகே இருசக்கர வாகனங்களைத் திருடிய பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:52 am IST

உதகை அருகே இருசக்கர வாகனங்களைத் திருடிய பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

உதகையை அடுத்த கேத்தி பாலாடா திருவள்ளுவா் நகா் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 11-ஆம் தேதி திருடுபோனது. இது குறித்து கேத்தி காவல் நிலையத்தில் வாகன உரிமையாளா் புகாா் அளித்தாா்.

இதேபால, எல்லநள்ளி அரசுப் பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 12-ஆம் தேதி திருபோனது. இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது கேத்தி பகுதியைச் சோ்ந்த 17 வயதான கல்லூரி மாணவா்கள் 3 போ், பள்ளி மாணவா் ஒருவா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறுவா் சீா்த்திருத்த பள்ளியில் அடைத்தனா்.