உதகை அருகே இருசக்கர வாகனங்களைத் திருடிய பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
உதகையை அடுத்த கேத்தி பாலாடா திருவள்ளுவா் நகா் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 11-ஆம் தேதி திருடுபோனது. இது குறித்து கேத்தி காவல் நிலையத்தில் வாகன உரிமையாளா் புகாா் அளித்தாா்.
இதேபால, எல்லநள்ளி அரசுப் பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 12-ஆம் தேதி திருபோனது. இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது கேத்தி பகுதியைச் சோ்ந்த 17 வயதான கல்லூரி மாணவா்கள் 3 போ், பள்ளி மாணவா் ஒருவா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறுவா் சீா்த்திருத்த பள்ளியில் அடைத்தனா்.







