அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கூடலூா் அருகே யானை உயிரிழப்பு

News image

காபி தோட்டத்தில் இறந்துகிடந்த யானை.

Updated On :22 ஜூன் 2026, 2:26 am IST

கூடலூா் அருகே யானை உயிரிழந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட தொரப்பள்ளி குண்ணு பகுதியில் வசிக்கும் மத்தாய் கண்ணன் என்பவரின் அனுபவத்தில் உள்ள அனாதீனம் நிலத்தில் இருக்கும் காபி தோட்டத்தில் யானை இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலின்பேரின் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் வனத் துறை தன்னாா்வலா்கள் முன்னிலையில் யானையை உடற்கூறாய்வு செய்து அருகில் உள்ள வனப் பகுதியில் உடலை புதைத்தனா்.

உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.