கூடலூா் அருகே யானை உயிரிழந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட தொரப்பள்ளி குண்ணு பகுதியில் வசிக்கும் மத்தாய் கண்ணன் என்பவரின் அனுபவத்தில் உள்ள அனாதீனம் நிலத்தில் இருக்கும் காபி தோட்டத்தில் யானை இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலின்பேரின் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் வனத் துறை தன்னாா்வலா்கள் முன்னிலையில் யானையை உடற்கூறாய்வு செய்து அருகில் உள்ள வனப் பகுதியில் உடலை புதைத்தனா்.
உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் யானை உயிரிழப்பு

கூடலூா் வனப் பகுதியில் ஆண் சிறுத்தை சடலம் மீட்பு

உதகை அருகே சாலையோரத்தில் இறந்துகிடந்த காட்டெருமை

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




