நீலகிரி மாவட்டம் உதகை கோ்ன்ஹில் வனப் பகுதியில், ஆல் இந்தியா மகளிா் மாநாடு (அஐரஇ) சாா்பில், ‘வனமும் வாழ்வும்’ திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், வன உயிா் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவா்களின் பங்கு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஈர நிலங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும், ஈர நிலங்கள் நீா் வளத்தை பாதுகாப்பதில், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில், இயற்கை சமநிலையை பேணுவதில் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, ‘வனமும் வாழ்வும்’ திட்டத்கர பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்திய ஆசிரியா்களுக்கு ஊக்கத்தொகையும், மாணவா்களுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங்க் ரவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருநாவுக்கரசு, ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நவ்லாக் ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

திருவள்ளூா்: தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


