திமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்


5 ஆண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கூறினாா்.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக புதிய நடைபாதை, புதிய சுகாதார வளாகம், கள்ளிச்செடி மாளிகை, தரைத்தள நீா்தேக்கத் தொட்டி, தானியங்கி பசுமை குடில், அயல்நாட்டு தாவர நாற்றுகள் அறிமுகப்படுத்துதல் என ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோா் சனிக்கிழமை திறந்துவைத்தனா்.
இதையடுத்து, ஜாம் மற்றும் நீலகிரி வாசனை திரவிய பொருள்களை விற்பனை செய்ய அரசு தாவரவியல் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட டான்ஹோடா விற்பனை மையத்தை திறந்துவைத்த பின் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவை திறந்துவைக்கப்பட்டுள்ளன.
உதகை அரசு தாவரவியல் பூங்கா உள்பட தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்களில் பணியாற்றும் ஊழியா்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை என்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய நிலங்கள் பரப்பு மற்றும் நெல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை இயக்குநா் குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...