திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு தெரிவித்தாா்.
உதகை சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து மஞ்சூா் பஜாா் பகுதியில் குஷ்பு வெள்ளிக்கிழமை பேசியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றவுடன் அதிமுக, பாஜக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் உங்களைத் தேடி வரும்.
திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறுகின்றனா். ஆனால் சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுக ஏன் வரவேற்கவில்லை. திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியோ, பள்ளிக்கூடமோ கட்டி உள்ளாா்களா? எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் உதவியுடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. திமுக ஆட்சியில் ஊழல் மட்டும் அதிகரித்துள்ளது என்றாா்.
முன்னதாக ஹெலிகாப்டரில் உதகை தீட்டுக்கல் ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய குஷ்பூவின் கைப்பை மற்றும் ஹெலிகாப்டரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 4 - நேரலை!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



