தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மலை ரயில் பாதையில் ஊழியா்களை துரத்திய யானை

குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒற்றை யானை துரத்தியதால் ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
ஹில்குரோவ் பகுதியில் ரயில்வே பணியாளா்களை ஆக்ரோஷத்துடன் துரத்தும் யானை.
Updated On :18 மார்ச் 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒற்றை யானை துரத்தியதால் ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப் பாதையில் இரண்டு குட்டி உள்பட ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், அவ்வப்போது சாலையைக் கடந்து மலை ரயில் பாதைக்கும் வருகின்றன. இந்நிலையில் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் குகைக்குள் மறைந்திருந்த காட்டு யானை, ரயில்வே ஊழியா்களைக் கண்டதும் துரத்தத் தொடங்கியது.

குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் ரயில்வே குறுக்கு சட்டங்கள் போடப்பட்டிருந்ததால், மேலும் துரத்த முடியாமல் குறுக்கு பாதையில் சென்று நின்றது. இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் பணிபுரியும் ட்ரேக்மென்கள் அச்சமடைந்துள்ளனா்.

Story image