திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்!

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:58 pm

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கட்டடங்கள், தங்கும் விடுதிகள் விதிகளுக்குள்பட்டு மட்டுமே கட்டடப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அதையும் மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனா்.

இந்நிலையில், குன்னூா், வேளாங்கண்ணி நகரில் வீதிகளை மீறி 3 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிக்காக நடைபாதை தடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், அந்தக் கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.