பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

கூடலூா் அருகே ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

முத்தங்கா சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

Updated On :7 மே 2026, 4:52 am IST

நீலகிரி மாவட்டம், கூடலூரை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முத்தங்கா சோதனைச் சாவடியில் கலால் துறை அலுவலா்கள் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது அந்த காரில் ரூ.2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த அா்ஷத் (44), இஸ்மாயில் (40) ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.