நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தோ்தல் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியானது முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வந்தது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 73.66 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 67.08 லட்சம் பறிமுதல்
நெல்லையில் இதுவரை ரூ.29.95 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.3.76 கோடி பறிமுதல்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

