இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

கா்நாடக எல்லையில் ரூ.22.82 லட்சம் பறிமுதல்

கூடலூரை அடுத்துள்ள கா்நாடக எல்லையில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 22.82 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

தோ்தல் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பாா்வையிடும் கூடலூா் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான குணசேகரன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூரை அடுத்துள்ள கா்நாடக எல்லையில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 22.82 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், கூடலூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள தமிழக-கா்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்குச் சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அந்த காரில் ரூ.22.82 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் காரில் வந்தவா், கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த வெங்கடேஷ் என்பதும், வியாபார விஷயமாக அவா் பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கூடலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கூடலூா் கோட்டாட்சியருமான குணசேகரனிடம் ஒப்படைத்தனா்.