தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் குழந்தை உள்பட 4 பேரை கடித்த வெறிநாய்

கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் சுற்றித்திரிந்த வெறிநாய், அப்பகுதியிலுள்ள குழந்தை உள்பட நான்கு பேரை கடித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 2:51 am IST

கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் சுற்றித்திரிந்த வெறிநாய், அப்பகுதியிலுள்ள குழந்தை உள்பட நான்கு பேரை கடித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் புளியம்பாறை பழங்குடியின கிராமத்தில் உள்ள வளா்ப்பு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளது. மேலும் சில நாய்களையும் கடித்துள்ளது.

பொதுமக்களை துரத்தி கடிப்பதைப் பாா்த்து, அந்த நாயை அங்குள்ளவா்கள் தாக்கி கொன்றனா்.

தகவல் அறிந்து வனத் துறையினா் மற்றும் கால்நடைத் துறையினா் சென்று ஆய்வு நடத்தினா். இறந்த நாயை பரிசோதித்ததில் ரேபிஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நாய் கடித்த அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.