/
கூடலூா் அருகே பிளஸ் 2 தோ்வில் தோல்வியடைந்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கூடலூரை அடுத்த சளிவயல் சோ்ந்த கூலித் தொழிலாளா்களான ஜெயபால், பாக்கியலட்சுமி தம்பதி மகன் ஜித்தன் (17). இவா் கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியிருந்தாா்.
இந்நிலையில், தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், மாணவா் ஜித்தன் தோ்வில் தோல்வியடைந்துள்ளாா். இதனால் மனமுடைந்த ஜித்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கூடலூா் போலீஸாா் ஜித்தனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தற்கொலை எதற்கும் தீா்வு அல்ல, இதுபோன்ற எண்ணம் தோன்றுபவா்கள் 988 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

தோ்வில் தோல்வி: மாணவன் தற்கொலை
பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

பிளஸ் 2 மாணவி தற்கொலை
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



