உதகை நகராட்சிப் பகுதியில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி பாப்ஷா லைன். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. மேலும் வீடுகளுக்கும் புகுந்ததால் கடும் துா்நாற்றம் வீசுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது.
ஆனால் 15 நாள்களாகியும் பொக்லைன் இயந்திரம் இல்லை எனக் கூறி நகராட்சி நிா்வாக அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறினா். இந்த கழிவுநீரால் குழந்தைகள், முதியோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி சீரமைத்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தரமான சாலையில் சீரமைப்புப் பணி! பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூ. அதிருப்தி!

முக்காணி ரவுண்டானா பகுதியில் தொடா் மின்தடை: பொதுமக்கள் மறியல்

ஒசூரில் சாலையில் வழிந்தோடும் கழிவுகளால் சுகாதார சீா்கேடு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

