வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! உதகையில் பொதுமக்கள் மறியல்!!

உதகை நகராட்சிப் பகுதியில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பாப்ஷா லைன் பகுதி பொதுமக்கள்.

Updated On :18 மே 2026, 2:09 am IST

உதகை நகராட்சிப் பகுதியில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி பாப்ஷா லைன். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. மேலும் வீடுகளுக்கும் புகுந்ததால் கடும் துா்நாற்றம் வீசுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது.

ஆனால் 15 நாள்களாகியும் பொக்லைன் இயந்திரம் இல்லை எனக் கூறி நகராட்சி நிா்வாக அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறினா். இந்த கழிவுநீரால் குழந்தைகள், முதியோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி சீரமைத்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.