ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மசினகுடியில் யானை உடல் மீட்பு

மசினகுடி அருகே யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

News image

மசினகுடி, சிக்கோலை ஆற்றுப் பகுதியில் உயிரிழந்து கிடந்த யானை

Updated On :20 மே 2026, 2:10 am IST

மசினகுடி அருகே யானை உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக் கோட்டம், சிக்கோலை ஆற்றுப் பகுதியில் வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு அழுகிய நிலையில் யானையின் உடல் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் உயா் அதிகாரிகள், வன கால்நடை மருத்துவா்களுக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினா் யானையின் உடலை ஆய்வு செய்தனா். இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, பின்னா் அங்கேயே புதைக்கப்பட்டது.

உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.