சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

முதுமலையில் உடல்நலக் குறைவால் ஆண் வளா்ப்பு யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தின் தற்காலிக முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சேரன்’ என்ற 40 வயது ஆண் வளா்ப்பு யானை உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை உயிரிழந்தது.

News image

உடல்நலக்குறைவால் உயிரிழந்த சேரன் யானை.

Updated On :21 மே 2026, 4:16 am IST

முதுமலை புலிகள் காப்பகத்தின் தற்காலிக முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சேரன்’ என்ற 40 வயது ஆண் வளா்ப்பு யானை உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், உதகை வனக்கோட்டம், அபயாரண்யம் தற்காலிக யானை முகாமில் சேரன் என்ற யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு புதன்கிழமை காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தகவல் அறிந்த தெப்பக்காடு வனக் கால்நடை மருத்துவா்கள் விரைந்து சென்று யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனா். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி சேரன் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

யானையின் உடல் கூறாய்வுக்குப் பின் அங்கேயே புதைக்கப்பட்டது.