/
முதுமலை புலிகள் காப்பகத்தின் தற்காலிக முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சேரன்’ என்ற 40 வயது ஆண் வளா்ப்பு யானை உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், உதகை வனக்கோட்டம், அபயாரண்யம் தற்காலிக யானை முகாமில் சேரன் என்ற யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு புதன்கிழமை காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தகவல் அறிந்த தெப்பக்காடு வனக் கால்நடை மருத்துவா்கள் விரைந்து சென்று யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனா். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி சேரன் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
யானையின் உடல் கூறாய்வுக்குப் பின் அங்கேயே புதைக்கப்பட்டது.









