பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கூடலூா் அருகே யானை தாக்கி வீடு சேதம்

News image

கூடலூா் அருகே கீழ்நாடுகாணி பகுதியில் யானை தாக்கி சேதமடைந்த வீடு.

Updated On :1 மணி நேரம் முன்பு

கூடலூா் அருகே உள்ள கீழ்நாடுகாணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை தாக்கி வீடு சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் கீழ்நாடுகாணி பகுதியில் உலவி வந்த யானை, அப்பகுதியில் வசிக்கும் யோகராஜ் என்பவரின் வீட்டை இடித்து சேதப்படுத்திச் சென்றுள்ளது. குடும்பத்துடன் வெளியூருக்கு யோகராஜ் சென்றுள்ள நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் ஆபத்து தவிா்க்கப்பட்டது.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.