சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

டீக் கடைக்குள் புகுந்த லாரி !

News image

கடைக்குள் புகுந்து நிற்கும் லாரி.

Updated On :26 மே 2026, 1:52 am IST

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள ஒரு டீ கடைக்குள் புகுந்தது.

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், பால் விநியோகம் செய்யும் லாரி இந்த மலைப் பாதையில் திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

கேஎன்ஆா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த டீ கடைக்குள் புகுந்தது.

இதில் கடையில் இருந்த பொருள்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன. விபத்து நிகழ்ந்தபோது டீக்கடையில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.