சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

காட்டெருமையைக் கண்டு ஓடிய யானை

News image

கோத்தகிரி அருகே தேயிலைத் தேட்டத்தில் சண்டையிட தயாரான காட்டெருமை, யானை.

Updated On :31 மே 2026, 2:07 am IST

கோத்தகிரி அருகே காட்டெருமையும், யானையும் மோதும்  சூழல் ஏற்பட்டபோது, யானை அஞ்சி ஓடிய விடியோ வைரலாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அமைந்துள்ளது முள்ளூா் பகுதி. கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து  தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் முள்ளூா் பகுதியில் உலவி வந்தபோது யானையும், காட்டெருமையும் நேருக்கு நோ் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஆனால், காட்டெருமைக்கு அஞ்சி யானை சென்றுவிட்டது. இந்த விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.